top of page

Learn Kurai Ondrum Illai

Writer's picture: Uma ShankariUma Shankari

Updated: Feb 25

இப்பாடலை எழுதியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆவார்.


பல்லவி (ராகம்: சிவரஞ்சனி)

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


அனுபல்லவி (ராகம்: சிவரஞ்சனி )

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா


சரணம்1 (ராகம் சிவரஞ்சனி)

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க

வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா


சரணம்2 (ராகம்: காபி)

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா

உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்

உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா


குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா


சரணம்3 (ராகம்: சிந்துபைரவி)

கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி

நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா

நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா


சரணம் – 5

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்

ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…..


As sung by M.S. Subbalakshmi



Below are two videos that will help you to learn the song with ease.















©2022 by Tiruppugazh Nectar.

bottom of page