top of page

ராம சரித கீதம் - பகுதி 10

Writer's picture: Uma ShankariUma Shankari

Updated: Dec 13, 2024

சரணம் 18 : ராகம் - கேதாரம்

கடலில் அணை கட்டி லங்கை

அடைந்து விளைந்த போரிலே

கும்பகர்ணனோடு இந்திரஜித்தும்

அளவிலா ராக்ஷஸரும்

அழிந்தொழிய கணை மழை

பொழி அழகனைக்- (கோசலை)


சரணம் 19 : ராகம் - நவரஸகன்னடா

மாமுனிவரும் வானவரும்

கற்புடைய மாதர் குலமும்

நடு நடுங்க லங்கையில் வாழ்ந்தவன்

தலைகள் பத்தும் பனம்

குலை போல் சீவி எரிந்த

ஜய கோதண்ட ராமனைக்- (கோசலை)


வழக்கம் போல் திருமதி பூமா கிருஷ்ணன் மூலம் மேற்கண்ட இரு சரணங்களையும் பல முறை கேட்டு கற்று கொள்வோம்.


ராகம் கேதாரம்



ராகம் நவரஸகானடா




©2022 by Tiruppugazh Nectar.

bottom of page